விலை


உங்களுக்குத் தெரியுமா
கண்களுக்குத் தெரியாமல்
வேறொரு உலகம் இங்கு
இயங்கி வருவதை
உலகை வெற்றி கொள்ள
அலைந்தவர்களெல்லாம்
விதியிடம் தோற்றதை
எல்லா புரட்சியிலும்
இறந்தவர்களின் எண்ணிக்கை
எவ்வளவு என்பதை
ஒரு நாட்டின்
இறையாண்மைக்காக
இரண்டரை லட்சம் பேர்
பலியானதை
வல்லரசாகும் பேராசையில்
பழங்குடியினர் புறக்கணிக்கப்படுவதை
கன்னிமை தொலைத்த பெண்கள்
கண்ணகியாவதை
மேலை நாட்டு
மொழியின் ஆதிக்கத்தால்
தமிழ் மெல்ல மெல்ல
செத்துக் கொண்டிருப்பதை
வக்கற்ற ஜனங்கள்
ஓட்டுப் போடுவதோடு
தங்கள் ஜனநாயகக் கடமை
முடிந்துவிட்டதாக எண்ணுவதை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக