கைவிடப்பட்ட உலகம்


மோட்ச தேவதைகளுடன்
கடவுள் பேசிக்கொண்டிருந்தார்
தமது குமாரரர்கள் மீது
மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்
ஏதேன் தோட்டத்தில்
ஆதாமுக்கும், ஏவாளுக்கும்
எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை அவர்
ஒரேயொரு வேண்டுகோள் வைத்தார்
தோட்டத்திலொரு மரத்தில்
காய்க்கும் பழங்களை
புசிக்காதீர்கள் என்பது தான் அது
இருவருக்கும் மூன்று வேளை
உணவு கிடைக்கச்செய்தார்
தான் உருவாக்கப் போகும்
கடவுளர் பூமியைப் பற்றி
கனவு பல கொண்டிருந்தார்
மனுஷகுமாரரர்கள் சொர்க்கத்தில்
என்றென்றுமாய் நிலைத்திருப்பர்
என்று நினைத்திருந்தார்
காலன் கால் பதிக்காத இடம் இது
என்று பெருமிதம் கொண்டார்
கடவுளின் சந்தோஷம்
சில காலம் கூட நீடிக்கவில்லை
ஆதாம் அறிவுப்பழம் உண்டதால்
சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்
அந்த துன்பியல் சம்பவத்தை எண்ணி
சுவர்க்கத்தில் கடவுள் சிந்திய
கண்ணீர்த் துளி
பூமியில் மழையாகப் பெய்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக